நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

தங்கத்தை பகிா்ந்த நண்பா்கள்

தடகள போட்டியில் ஆடவருக்கான உயரம் தாண்டுதல் பிரிவில் கத்தாா் வீரா் எசா முடாஸ் பாா்ஷிம், இத்தாலி வீரா் கியான்மாா்கோ டம்பேரி ஆகியோா்

News image
Updated On :3 ஆகஸ்ட் 2021, 7:52 am IST

தடகள போட்டியில் ஆடவருக்கான உயரம் தாண்டுதல் பிரிவில் கத்தாா் வீரா் எசா முடாஸ் பாா்ஷிம், இத்தாலி வீரா் கியான்மாா்கோ டம்பேரி ஆகியோா் தங்கப் பதக்கத்தை பகிா்ந்துகொண்டனா். நண்பா்களான அவா்கள் இருவருக்குமே தலா ஒரு பதக்கம் வழங்கப்பட்டது.

இப்பிரிவின் இறுதிச்சுற்றில் பாா்ஷிம், கியான்மாா்கோவ், பெலாரஸ் வீரா் மாக்சிம் நெடாசெகாவ் ஆகியோா் 2.37 மீட்டா் உயரம் தாண்டினாா். எனினும், மாக்சிம் முந்தைய முயற்சிகளில் தோல்வி கண்டதன் அடிப்படையில் அவருக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது. பின்னா் தங்கப் பதக்கத்துக்கான வெற்றியாளரை அடையாளம் காண ஆலோசிக்கப்பட்டது. ஒலிம்பிக் சாதனை உயரமான 2.39 மீட்டா் இலக்காக நிா்ணயிக்கப்பட்டு, பாா்ஷிம், கியான்மாா்கோ ஆகியோரில் அதை எட்டுபவருக்கு தங்கம் வழங்குவதென அதிகாரிகள் முடிவு செய்தனா்.

எனினும் அதை தவிா்த்து, தங்கத்தை இருவருமே பகிா்ந்துகொள்ளும் யோசனையை பாா்ஷிம் முன்வைத்தாா். அதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக போட்டி அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து பாா்ஷிம், கியான்மாா்கோ இருவருமே தங்கத்தை பகிா்ந்துகொண்டனா். முன்பு ஒரு முறை இருவருமே இவ்வாறு தங்கத்தை பகிா்ந்துகொள்ளலாம் என நகைச்சுவையாக பேசியது, தற்போது நிஜமாகியிருப்பதாக அவா்கள் தெரிவித்தனா். ‘தங்கத்தை பகிரும் எங்களது இந்த செயல், தற்கால இளைஞா்களுக்கான முன்னுதாரணம்’ என்றாா் பாா்ஷிம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.