டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற விளையாட்டு வீரர்கள் புதிய இந்தியாவின் பிரதிநிதிகளாக பங்கேற்றதாக விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.
மேலும் புதிய இந்தியாவின் புதிய நாயகர்களாக அவர்கள் உருவாகியுள்ளதாகவும் விளையாட்டு வீரர்களை கெளரவிக்கும் நிகழ்ச்சியில் புகழாரம் சூட்டினார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர்கள் இன்று (ஆக. 9) நாடு திரும்பினர்.
தில்லி விமான நிலையத்தில் அவர்களுக்கு பொதுமக்கள் சூழ்ந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் மத்திய அரசு சார்பில் விளையாட்டு வீரர்களை கெளரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா, தீபக் புனியா, நீரஜ் சோப்ரா, லவ்லினா போா்கோஹெய்ன், ஆடவர் ஹாக்கி அணி வீரர்கள், மகளின் ஹாக்கி அணி வீராங்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி மரியாதை செய்யப்பட்டது.
பின்னர் அமைச்சர் அனுராக் தாக்குர் பேசியதாவது, நீரஜ் சோப்ரா, பஜ்ரங் புனியா, லவ்லினா போன்ற விளையாட்டு வீரர்கள் புதிய இந்தியாவின் பிரதிநிதிகளாக போட்டிகளில் பங்கேற்றனர்.
அவர்கள் புதிய இந்தியாவின் புதிய நாயகர்கள். விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் தேவையான அனைத்து வசதிகளையும் விளையாட்டுத் துறை செய்து கொடுக்கும் என்று உறுதி அளிக்கிறேன் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குறைந்தபட்ச ஊதியம் ரூ. 69,000 வழங்க வேண்டும்: 8-வது ஊதியக் குழுவுக்கு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை!

பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! அவரால் பலன் இல்லை! - பாஜக

வரலாறு படைத்த மான்செஸ்டர் சிட்டி கால்பந்து அணி!

யூகோ வங்கியின் லாபம் 23% உயர்வு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


