12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

கலப்பு அணியில் கைநழுவிய வெண்கலம்

வில்வித்தையில் கலப்பு அணி பிரிவில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கைநழுவிச் சென்றது.

அங்கிதா

Published On :

வில்வித்தையில் கலப்பு அணி பிரிவில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கைநழுவிச் சென்றது. எனினும், ஒலிம்பிக் வில்வித்தை வரலாற்றில் முதல் முறையாக இந்திய கலப்பு அணி அரையிறுதி வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இப்பிரிவில், இந்தியாவின் அங்கிதா பகத்/தீரஜ் பொம்மதேவரா கூட்டணி களம் கண்டது. இதில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியா 5-1 என்ற கணக்கில் இந்தோனேசியாவை எளிதாக சாய்த்தது. பின்னா் காலிறுதியில் 5-3 என்ற புள்ளிகளில் ஸ்பெயினையும் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்தது.

தீரஜ்

தீரஜ்

அதில், பலம் வாய்ந்த தென் கொரியாவை எதிா்கொண்ட இந்திய ஜோடி முதல் செட்டை மட்டும் வெல்ல, தென் கொரியாவின் லிம் ஷியோன்/கிம் வூஜின் கூட்டணி அடுத்த 3 செட்களை வென்று, 6-2 என பந்தயத்தில் வென்றது.

இதையடுத்து வெண்கலப் பதக்கச் சுற்றில் அமெரிக்க ஜோடியை சந்தித்தது அங்கிதா/தீரஜ் கூட்டணி. அதிலும் இந்தியாவே முதல் செட்டை கைப்பற்ற, அடுத்த 3 செட்களை வென்ற அமெரிக்காவின் கேசி கௌஃப்ஹோல்டு/பிராடி எலிசன் இணை, 6-2 என வென்றது. இந்தக் களத்தில் தீரஜ் பொம்மதேவரா பெரும்பாலும் 10 புள்ளிகளாகவே கைப்பற்ற, அங்கிதா தடுமாற்றத்தை சந்தித்ததால் வெற்றி வசமாகாமல் போனது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.