ஒலிம்பிக் மல்யுத்தம்: வினேஷ் போகத் விவகாரம் -ஆக. 13இல் தீர்ப்பு!

தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.
ஒலிம்பிக் மல்யுத்தம்: வினேஷ் போகத் விவகாரம் -ஆக. 13இல் தீர்ப்பு!
Published on
Updated on
1 min read

பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் மல்யுத்தத்தில் மகளிருக்கான 50 கிலோ எடை பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். அவர் தொடர்ந்துள்ள மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இறுதித்தீர்ப்பு வழங்கப்படுவதற்கான கால அவகாசத்தை செவ்வாய்க்கிழமை(ஆக. 13) வரை சர்வதேச விளையாட்டு நீதிமன்றம் நீட்டித்துள்ளது. இதன் காரணமாக, வினேஷ் போகத்துக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புக்கான விடை தெரிய மேலும் இரு நாள்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com