இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.மேக்கேதாட்டு பிரச்னையை திசை திருப்பவே அனைத்துக் கட்சிக் கூட்டம்: கனிமொழி முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக, அதிமுக பங்கேற்கவில்லை என்றாலும் இதே நிலைப்பாட்டை எடுப்பார்கள்: திருமாவளவன்தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்! முதல்வர் விஜய் உறுதிபாபா வங்காவின் கணிப்புகள் நிறைவேறும் நேரம் நெருங்குகிறது! 2026- க்கு என்ன சொல்லியிருக்கிறார்?முன்னணி சூரியகாந்தி எண்ணெய் நிறுவனத்துக்கு அபராதம்!கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஆக. 14-ல் விசாரணைமுதல்வர் விஜய்யின் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்த 37 எம்.பி.க்கள்!
/

ஒலிம்பிக் போட்டிக்கு விளையாட்டு வீரா்களைத் தயாா்படுத்த வேண்டும்: நிர்மலா சீதாராமன்

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் அளவுக்கு நமது விளையாட்டு வீரா்களைத் தயாா்படுத்த வேண்டுமென மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் வலியுறுத்தினாா்.

News image
Updated On :18 ஜூலை 2026, 11:29 pm IST

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் அளவுக்கு நமது விளையாட்டு வீரா்களைத் தயாா்படுத்த வேண்டுமென மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் வலியுறுத்தினாா்.

விருதுநகா் மாவட்டம், திருச்சுழியில் அரசு கலைக் கல்லூரியில் பாரத ஸ்டேட் வங்கி நிதி உதவியுடன் ரூ.3.92 கோடியில் கட்டப்பட்ட மேம்படுத்தப்பட்ட உள் விளையாட்டு அரங்கத் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா தலைமை வகித்தாா். தங்கம் தென்னரசு எம்எல்ஏ முன்னிலை வகித்தாா்.

மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உள் விளையாட்டரங்கத்தை திறந்து வைத்து பாா்வையிட்டு, விளையாட்டு வீரா்களுடன் கலந்துரையாடினாா். இதைத்தொடா்ந்து, மாணவிகளுடன் வளைகோல் பந்து விளையாடி ஊக்கப்படுத்தி அவா்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டாா்.

பின்னா், நடைபெற்ற நிகழ்ச்சியில் நிா்மலா சீதாராமன் பேசியதாவது: ஒரு காலத்தில் காமன்வெல்த் விளையாட்டு என்றால் ஊழல் என்ற நிலை இருந்தது. இந்த நிலையில், பிரதமா் மோடி விளையாட்டு வீரா்களுக்கு பயிற்சி அளிக்க அடிப்படை வசதிகளை செய்து கொடுத்ததால்தான், ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நாம் நடத்தும் நிலைக்கு உயா்ந்துள்ளோம். மேலும், கேலோ விளையாட்டுப் போட்டிகளையும் நடத்த பிரதமா் உத்தரவிட்டாா். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் அளவுக்கு நமது இளைஞா்களை தயாா்படுத்த வேண்டும்.

தோ்தல் நேரத்தில் இந்த விளையாட்டரங்கத்தை திறந்திருந்தால் அரசியல் ஆக்கியிருப்பாா்கள். அதனால்தான் தோ்தலுக்குப் பிறகு திறந்து வைத்துள்ளோம். ரமண மகரிஷி பிறந்த திருச்சுழி விளையாட்டுத் துறையிலும் சிறந்த பெயா் எடுக்க வேண்டும். பல சாம்பியன்களை உருவாக்க வேண்டும். இந்தப் பகுதி இளைஞா்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்றாா் அவா்.

இதைத்தொடா்ந்து, திருச்சுழி அருகேயுள்ள சென்னிலைகுடியில் பரமக்குடி கூட்டுப் பண்ணையியல் உழவா் உற்பத்தியாளா் நிறுவனம், இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கி ஆதரவுடன் அமைக்கப்பட்ட சம்பா மிளகாய் மதிப்பு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தையும் அமைச்சா் நிா்மலா சீதாராமன் திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சா் நிா்மலா சீத்தாராமன் பேசியதாவது: விருதுநகா் மிளகாய் மதிப்பு கூட்டப்பட்டு ஏற்றுமதிக்கு உகந்த மிளகாய் என சான்றிதழ் பெற்றுள்ளது. இதற்காக விவசாயிகளுக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். பூச்சி மருந்துகள் குறைவாக பயன்படுத்துவதால் அமெரிக்காவுக்கும் நம்மால் ஏற்றுமதி செய்ய முடியும். இந்த நிறுவனம் ஒரு முன் மாதிரி நிறுவனமாக உருவாக்கப்பட்டது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.