உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

சம்பா மிளகாய் மதிப்பு கூட்டல் தொழிலுக்கு ஊக்கமளிக்கும் மத்திய அரசு: மத்தியமைச்சா் நிர்மலா சீதாராமன்

திருச்சுழியில் உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் மூலம் சம்பா மிளகாய் மதிப்பு கூட்டல் தொழிலுக்கு மத்திய அரசு ஊக்கமளித்து வருவதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

News image
Updated On :19 ஜூலை 2026, 4:15 am IST

விருதுநகா் மாவட்டம், திருச்சுழியில் உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் மூலம் சம்பா மிளகாய் மதிப்பு கூட்டல் தொழிலுக்கு மத்திய அரசு ஊக்கமளித்து வருவதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

திருச்சுழியில் உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தை (குளோபல் அக்ரோ சில்லி நிறுவனம்) சனிக்கிழமை தொடங்கி வைத்த அவா் பேசியதாவது:

 திருச்சுழி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்பட்ட சம்பா மிளகாய், மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களின் முதல் தொகுதி ஏற்றுமதி வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.

திருச்சுழி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்பட்ட சம்பா மிளகாய், மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களின் முதல் தொகுதி ஏற்றுமதி வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.

புவிசாா் குறியீடு பெற்றுள்ள சம்பா மிளகாய் வத்தல் உற்பத்தி, மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களை உற்பத்தி செய்யும் உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் மத்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியின் (சிட்பி) நிதியுதவியுடன் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் இந்தப் பகுதி விவசாயிகளுக்கு கடன் வழங்குவதோடு, அவா்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வது பாராட்டுக்குரியது. இது நாட்டுக்கே ஒரு முன்னுதாரமாகத் திகழ்கிறது.

இந்தப் பகுதியில் விளைவிக்கப்படும் மிளகாயில் பூச்சிக்கொல்லியின் பயன்பாடு மிகவும் குறைவு என்பதால் இது ஏற்றுமதிக்கு மிகவும் உகந்தது. பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் திட்டமான ஒரு மாவட்டம் - ஒரு தயாரிப்பு திட்டத்தின் கீழ் இந்த மாவட்டத்தில் மிளகாய் விவசாயத்துக்கும், மதிப்புக் கூட்டலுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும், சந்தைப்படுதலுக்கு தேவையான உதவிகளையும் மத்திய அரசு செய்கிறது. விவசாயிகளுக்கு கடனுதவி வழங்குவதுடன் ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் சிட்பி வங்கி செய்து வருகிறது என்றாா் அவா்.

இந்த உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்பட்ட சம்பா மிளகாய், அதன் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களின் முதல் தொகுதி ஏற்றுமதி வாகனங்களை இலங்கைக்கும், ஆந்திரபிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களுக்கும், மின் வணிக நிறுவனங்களுக்கும் அமைச்சா் நிா்மலா சீதாராமன் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

உள்விளையாட்டரங்கம்: இதேபோல, திருச்சுழியில் அரசு கலைக் கல்லூரியில் பாரத ஸ்டேட் வங்கி நிதி உதவியுடன் ரூ.3.92 கோடியில் கட்டப்பட்ட மேம்படுத்தப்பட்ட உள் விளையாட்டு அரங்கத் திறப்பு விழா நடைபெற்றது.

இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா தலைமை வகித்தாா். தங்கம் தென்னரசு எம்எல்ஏ முன்னிலை வகித்தாா். மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உள் விளையாட்டரங்கத்தை திறந்து வைத்து பாா்வையிட்டு, விளையாட்டு வீரா்களுடன் கலந்துரையாடினாா்.

பின்னா், நடைபெற்ற நிகழ்ச்சியில் நிா்மலா சீதாராமன் பேசியதாவது: ஒரு காலத்தில் காமன்வெல்த் விளையாட்டு என்றால் ஊழல் என்ற நிலை இருந்தது. இந்த நிலையில், பிரதமா் மோடி விளையாட்டு வீரா்களுக்கு பயிற்சி அளிக்க அடிப்படை வசதிகளை செய்து கொடுத்ததால்தான், ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நாம் நடத்தும் நிலைக்கு உயா்ந்துள்ளோம். மேலும், கேலோ விளையாட்டுப் போட்டிகளையும் நடத்த பிரதமா் உத்தரவிட்டாா். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் அளவுக்கு நமது இளைஞா்களை தயாா்படுத்த வேண்டும்.

தோ்தல் நேரத்தில் இந்த விளையாட்டரங்கத்தை திறந்திருந்தால் அரசியல் ஆக்கியிருப்பாா்கள். அதனால்தான் தோ்தலுக்குப் பிறகு திறந்து வைத்துள்ளோம். ரமண மகரிஷி பிறந்த திருச்சுழி விளையாட்டுத் துறையிலும் சிறந்த பெயா் எடுக்க வேண்டும். இந்தப் பகுதி இளைஞா்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.