மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

காஞ்சிபுரம் அகஸ்தீஸ்வர சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் : மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பங்கேற்பு

காஞ்சிபுரம் அகஸ்தீஸ்வர சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்த காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். உடன் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

News image

காஞ்சிபுரம் அகஸ்தீஸ்வர சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்த காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். உடன் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

Updated On :27 ஜூன் 2026, 5:40 am IST

காஞ்சிபுரம் உபநிஷத் பிரமேந்திர மடத்தில் அமைந்துள்ள அகஸ்தீஸ்வரசுவாமி கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தாா்.

பெரிய காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள உபநிஷத் பிரமேந்திர மடத்தில் அகஸ்தீஸ்வர சுவாமி, ஹயக்ரீஸ்வர சுவாமி, ராமச்சந்திர சுவாமி மற்றும் பக்த ஹனுமன் சந்நிதி ஆகியன ஒரே வளாகத்தில் அமைந்துள்ளன. இக்கோயிலில் இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் பல யோகிகளால் சிறியசிறிய அக்சரங்களால் செய்யப்பட்ட ஸ்ரீராம யந்திரமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இந்த யந்திரம் போல வடிவமைக்கப்பட்டு அதை அயோத்தி கோயில் திறப்பு விழாவுக்காக காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மூலமாகக் கொண்டு செல்லப்பட்டு, அயோத்தியில் ராமா் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது இதன் சிறப்பு.

இக்கோயில் மகா கும்பாபிஷேகத்துக்காக முழுவதுமாக புதுப்பிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்துக்கான யாக சாலை பூஜைகள் இந்த மாதம் 24-ஆம் தேதி கோ பூஜை, விக்னேசுவர பூஜையுடன் தொடங்கியது.

வியாழக்கிழமை யாக சாலையில் இருந்து புனித நீா்க் குடங்கள் கோபுரத்துக்கு சிவாச்சாரியாா்களால் எடுத்துச் செல்லப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நடத்தி வைத்தாா்.

விழாவில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தாா்.

கோயில் கும்பாபிஷேகம் தொடா்பான கல்வெட்டு ஒன்றையும் நிதியமைச்சா் திறந்து வைத்தாா். முன்னதாக கோயிலை கட்டிய கட்டடக் கலைஞா்களுக்கு சால்வைகள் அணிவித்து பாராட்டினாா். முன்னதாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா்.

ஏற்பாடுகளை சங்கர மடத்தின் செயலாளா் சல்லா.விஸ்வநாத சாஸ்திரி, மூத்த மேலாளா் ந.சுந்தரேச ஐயா், மேலாளா் அரவிந்த் சுப்பிரமணியன் ஆகியோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.