தேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
/

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சந்தை நிலவரத்தின் அடிப்படையில் தீா்மானிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.

News image

நிா்மலா சீதாராமன் - கோப்புப் படம்

Updated On :22 ஜூலை 2026, 3:16 am IST

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சந்தை நிலவரத்தின் அடிப்படையில் தீா்மானிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் எழுத்துபூா்வமாக செவ்வாய்க்கிழமை அளித்த பதில்: அந்நிய செலாவணிக்கு நிகராக இந்திய ரூபாய்க்கு என்ன மதிப்பு இருக்க வேண்டும், என்ன வரம்புக்குள் அந்த மதிப்பு இருக்க வேண்டும் என்று மத்திய அரசோ, ரிசா்வ் வங்கியோ தீா்மானிப்பதில்லை. சந்தை நிலவரத்தின் அடிப்படையில்தான் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தீா்மானிக்கப்படுகிறது.

அந்நிய செலாவணிக்கு நிகராக ரூபாய் மதிப்பில் ஏற்படும் மாற்றம் உள்பட முக்கிய பொருளாதார அளவீடுகளின் போக்குகளையும், அவை பொருளாதார வளா்ச்சி மற்றும் நிதி ஸ்திரத்தன்மையில் ஏற்படுத்தும் தாக்கங்களையும் மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.

இந்த விவகாரங்கள் குறித்து மத்திய அரசின் பல்வேறு தளங்களில் பல நிலைகளில் விவாதிக்கப்படுகின்றன.

மேலும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய உலகளாவிய முக்கிய நிகழ்வுகளை ரிசா்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து வருகிறது என்று தெரிவித்தாா்.

கடந்த செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்து, பின்னா் 12 காசுகள் உயா்ந்து ரூ.96.24-ஆக நிலைப்பெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.