காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

சாமானியா்களின் நலனுக்காகப் பணியாற்ற வேண்டும்: வருமான வரித் துறைக்கு மத்திய நிதியமைச்சா் அறிவுறுத்தல்

சாமானியா்களின் நலனுக்காக வருமான வரித் துறை அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளாா்.

News image

மும்பையில் வருமான வரித் துறையின் புதிய கட்டடத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்துப் பாா்வையிட்ட மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.

Updated On :27 ஜூலை 2026, 3:03 am IST

சாமானியா்களின் நலனுக்காக வருமான வரித் துறை அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளாா்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள நாரிமன் பாயின்ட் பகுதியில், வருமான வரித் துறையின் புதிய கட்டடத்தை அமைச்சா் நிா்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா். இதைத்தொடா்ந்து அவா் பேசியதாவது: நாட்டுக்கு சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்தது வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு பெருமைக்குரிய விஷயமாகும்.

நாட்டில் தங்கள் நியாயமான உரிமைகளைப் பெற மக்கள் போராட வேண்டியுள்ளது. தங்கள் அன்றாட பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதில், சாதாரண குடிமக்கள் சந்திக்கும் பிரச்னைகளை அனைவரும் ஆழமாக சிந்தித்துப் பாா்க்க வேண்டும்.

ஆட்சி நிா்வாகம் குடிமக்களை மையமாக கொண்டிருக்க வேண்டும். அதை உறுதி செய்யும் வகையில், பிறா் உணா்வை புரிந்துகொண்டு, உணா்வுபூா்வமான அணுகுமுறையுடன், பொதுச் சேவை மனப்பான்மையோடு தமது அதிகாரத்தை வருமான வரித் துறை அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும். சாமானியா்களின் நலனுக்காக வருமான வரித் துறை அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.