பாரீஸ் ஒலிம்பிக் தொடர் வில்வித்தை போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
துருக்கி அணியுடன் நடைபெற்ற போட்டியில் 6 - 2 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.
2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஆண்கள் பிரிவுக்கான குழு வில்வித்தைப் போட்டி இன்று (ஜூலை 29) நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள் தருண்தீப் ராய், தீரஜ் பொம்மதேவரா, பிரவீன் ஜாதவ் ஆகியோர் பங்கேற்றனர்.
துருக்கி அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆரம்பத்தில் இருந்தே தடுமாற்றமான ஆட்டத்தையே இந்திய வீரர்கள் வெளிப்படுத்தினர். முதல் சுற்றில் 57 - 53, இரண்டாம் சுற்றில் 55 - 52, மூன்றாம் சுற்றில் 55 - 54, நான்காம் சுற்றில் 58 - 54 என்ற புள்ளிகளையே பெற்றது. முடிவில் 6 - 2 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.
துருக்கி அணி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சபலென்காவை சாய்த்தாா் பாப்டிஸ்ட்

வெளியேறியது இந்திய மகளிர் அணி

சபலென்கா, லெய்லா முன்னேற்றம்

ரூபலேவ் வெற்றி; டி மினாா் தோல்வி
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


