பாரீஸ் ஒலிம்பிக் தொடர் வில்வித்தை போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
துருக்கி அணியுடன் நடைபெற்ற போட்டியில் 6 - 2 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.
2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஆண்கள் பிரிவுக்கான குழு வில்வித்தைப் போட்டி இன்று (ஜூலை 29) நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள் தருண்தீப் ராய், தீரஜ் பொம்மதேவரா, பிரவீன் ஜாதவ் ஆகியோர் பங்கேற்றனர்.
துருக்கி அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆரம்பத்தில் இருந்தே தடுமாற்றமான ஆட்டத்தையே இந்திய வீரர்கள் வெளிப்படுத்தினர். முதல் சுற்றில் 57 - 53, இரண்டாம் சுற்றில் 55 - 52, மூன்றாம் சுற்றில் 55 - 54, நான்காம் சுற்றில் 58 - 54 என்ற புள்ளிகளையே பெற்றது. முடிவில் 6 - 2 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.
துருக்கி அணி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சின்னர், மெத்வதெவ் முன்னேற்றம்

சபலென்காவை சாய்த்தாா் பாப்டிஸ்ட்

வெளியேறியது இந்திய மகளிர் அணி

ரூபலேவ் வெற்றி; டி மினாா் தோல்வி
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

