ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அசத்தும் கேப்டன் அஸ்வின்: சென்னையைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்துக்கு முன்னேறியது பஞ்சாப்!

பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்துவதில் அஸ்வின் மிகவும் கூர்மையான அறிவுடன் செயல்படுவதாக நிபுணர்கள் பாராட்டுகிறார்கள்... 

News image
Updated On :24 ஏப்ரல் 2018, 5:41 am

எழில்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 22-ஆவது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 4 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸை வீழ்த்தியது.

தில்லியில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய டெல்லி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்களுக்கு வீழ்ந்தது.

கடந்த மூன்று ஐபிஎல் போட்டிகளிலும் இருமுறை எட்டாவது இடங்களையும் ஒருமுறை ஐந்தாவது இடத்தைப் பெற்ற பஞ்சாப் அணி தற்போது புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நேற்றைய வெற்றியின் மூலம் சென்னையைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

பந்துவீச்சாளராக இதுவரை ஐபிஎல்-லில் பெயர் பெற்ற அஸ்வின், கேப்டனாகவும் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.  நேற்றைய ஆட்டத்தில் டெல்லி பேட்டிங் செய்தபோது பவர்பிளேயில் வேகப்பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்திய கேப்டன் அஸ்வின், அதன்பின்பு கடைசி ஓவரில் முஜீப் உர் ரஹ்மானை வீசச் செய்து வெற்றியைக் கண்டுள்ளார். இதனால் அஸ்வினின் தலைமைப் பண்புக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் கிடைத்துள்ளன. பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்துவதில் அஸ்வின் மிகவும் கூர்மையான அறிவுடன் செயல்படுவதாக நிபுணர்கள் பாராட்டுகிறார்கள். 

ஆறு ஆட்டங்களில் ஐந்து வெற்றிகளைப் பெற்றுள்ளதால் பஞ்சாப் அணி நிச்சயம் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறும் என்கிற நம்பிக்கை உருவாகியுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.