ராகுல், அஸ்வின் அதிரடி வீண்: 31 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் தோல்வி

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
ராகுல், அஸ்வின் அதிரடி வீண்: 31 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் தோல்வி
Published on
Updated on
1 min read

11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடரின் 44-ஆவது லீக் ஆட்டம் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இந்தூரில் நடைபெற்ற இப்போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் கேப்டன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் குவித்தது. 

அதிரடியாக ஆடிய துவக்க வீரர் சுனில் நரேன் 36 பந்துகளில் 9 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 75 ரன்கள் குவித்தார். கேப்டன் தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 50 ரன்கள் விளாசினார். ஆண்ட்ரே ரசல் 3 இமாலய சிக்ஸர்களுடன் 31 ரன்கள் சேர்த்தார். 

இந்நிலையில், 246 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு துவக்க வீரர் ராகுல் சிறப்பான அடித்தளத்தை ஏற்படுத்தினார். 29 பந்துகளில் 2 பவுண்டரி, 7 சிக்ஸர்களுடன் 66 ரன்கள் குவித்தார். கேப்டன் அஸ்வின் 22 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 45 ரன்கள் விளாசினார். ஆரோன் பிஞ்ச் 34 ரன்கள் சேர்த்தார்.

இருப்பினும் பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் மட்டுமே எடுத்து, 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com