புணே மைதானத்துக்கு பிரியாவிடை அளித்த தோனி, ஸீவா விடியோ

மகேந்திர சிங் தோனி மற்றும் அவரது மகள் ஸீவா ஆகியோர் புணே மைதானத்துக்கு பிரியாவிடை அளிக்கும் விதமாக விடியோ வெளியிடப்பட்டுள்ளது.
புணே மைதானத்துக்கு பிரியாவிடை அளித்த தோனி, ஸீவா விடியோ
Updated on
1 min read

11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஏற்பட்ட அரசியல் சூழல் காரணமாக முதல் போட்டிக்கு பின்னர் சூப்பர் கிங்ஸ் அணியின் சொந்த மைதானமாக புணே மாற்றப்பட்டது. 

இதையடுத்து நடப்பு சீசனின் கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 2-ஆம் இடத்தை தக்க வைத்து நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது. எனவே செவ்வாய்கிழமை நடைபெறும் முதல் குவாலிஃபையர் போட்டியில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

இந்நிலையில், மகேந்திர சிங் தோனி மற்றும் அவரது மகள் ஸீவா ஆகியோர் புணே மைதானத்துக்கு பிரியாவிடை அளிக்கும் விதமாக விடியோ ஒன்று எடுக்கப்பட்டு, அது தோனியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டு பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

முன்னதாக, புணே ஆடுகள ஊழியர்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி பரிசளித்தார் ஒவ்வொருவருக்கும் சிஎஸ்கே அணி சார்பில் ரூ.20 ஆயிரம் வழங்கினார். மேலும், அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதுபோன்று தோனி மற்றும் ஸீவா இருப்பது போன்ற ஓவியம் ஒன்று புணே ஆடுகள ஊழியர்கள் சார்பில் தோனிக்கு பரிசளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com