ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

36 ஆல் அவுட் - மெல்போர்னில் 8 விக்கெட் வெற்றி: 10 நாள்களுக்குள் விஸ்வரூபம் கொண்ட இந்திய அணி!

10 நாள்களுக்குள் இப்படியொரு மாற்றம் ஏற்படும் நாம் நினைக்கவில்லை. ஆனால்...

News image
அஸ்வின்
Updated On :29 டிசம்பர் 2020, 9:28 am

DIN


டிசம்பர் 19 அன்று 36 ரன்களுக்கு ஆட்டமிழந்து, அடிலெய்ட் டெஸ்டில் வரலாற்றுத் தோல்வி கண்டது இந்திய அணி.

டிசம்பர் 29 அன்று மெல்போர்ன் டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியடைந்து இன்னொரு புதிய வரலாறைப் படைத்துள்ளது.

இந்த விஸ்வரூபத்தை யாராவது எதிர்பார்த்திருக்க முடியுமா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டின் 4-ம் நாளான இன்று இந்திய அணி சிறப்பாகப் பந்துவீசி ஆஸ்திரேலிய அணியை 2-வது இன்னிங்ஸில் 200 ரன்களுக்குள் சுருட்டியது. இதனால் 70 ரன்கள் இலக்கை எளிதாகக் கடந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெளிநாடுகளில் இந்திய அணி பெற்ற மகத்தான வெற்றியாக இது மதிப்பிடப்படுகிறது.

எதனால் இந்த வெற்றி பெரிய அளவில் பாராட்டப்படுகிறது? வரலாற்றில் இடம் பிடித்துள்ளது?

10 நாள்களுக்கு முன்பு தான் தனது குறைந்தபட்ச டெஸ்ட் ஸ்கோரை எடுத்து அவமானப்பட்டது இந்திய அணி. அதுவும் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற பிறகு மோசமான பேட்டிங்கால் வெற்றி வாய்ப்பை இழந்தது. இனி மீண்டெழ முடியாது என நம்பிக்கை இழந்தார்கள் இந்திய ரசிகர்கள்.

முதல் குழந்தை பிறக்கும்போது மனைவி அனுஷ்கா சர்மாவுக்குத் துணையாக இருக்க வேண்டும் என்பதற்காக முதல் டெஸ்டை முடித்துவிட்டு இந்தியாவுக்குத் திரும்பிவிட்டார் விராட் கோலி. இதனால் டெஸ்ட் தொடரின் மீதமுள்ள மூன்று டெஸ்டுகளுக்கும் ரஹானே கேப்டனாகச் செயல்பட வேண்டிய நிலைமை. கோலி செல்வதால் இரு பின்னடைவுகள். மகத்தான கேப்டனின் துணை இல்லாதது, கோலி போன்ற வலுவான பேட்ஸ்மேன் அணியை விட்டு விலகுவதால் உண்டாகும் இழப்புகள். இக்காரணத்தால் டெஸ்ட் தொடரை 4-0 என ஆஸ்திரேலியா வெல்லும் என்று சொல்லாத முன்னாள் வீரர்களே கிடையாது. 

சதமடித்த ரஹானே

சதமடித்த ரஹானே

கடந்த சில வருடங்களாக வெளிநாடுகளில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்களித்தவர்கள் ஷமியும் இஷாந்த் சர்மாவும். ஐபிஎல் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து முழுமையாக விலகினார் இஷாந்த் சர்மா. ஷமிக்கு முதல் டெஸ்டில் காயம் ஏற்பட்டது. அந்தப் பக்கம் ஆஸ்திரேலிய அணி ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட் என முழு பலத்துடன் இருக்கும்போது இந்தப் பக்கம் இந்திய அணியில் பிரதான இரு வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லை. இதுபோதாதென்று உமேஷ் யாதவால் 2-வது டெஸ்டின் 2-வது இன்னிங்ஸில் முழுதாகப் பந்துவீச முடியவில்லை. காயத்தால் விலகினார். இதனால் நான்கு பந்துவீச்சாளர்களை வைத்து மட்டும் 2-வது இன்னிங்ஸில் விளையாடியது இந்திய அணி. ஆனாலும் ஆஸ்திரேலிய அணியால் டெஸ்ட் தொடரில் இதுவரை அதிகபட்சமாக 200 ரன்கள் தான் எடுக்க முடிந்துள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணியின் பந்துவீச்சு இந்தளவுக்கு ஆதிக்கம் செலுத்தும் என்று யார் கற்பனை செய்திருக்க முடியும்! 

முதல் டெஸ்டில் மோசமாகத் தோற்றபோதும் ஷுப்மன் கில், சிராஜ் என இரு புதியவர்களைக் களத்தில் இறக்கியது இந்திய அணி. இருவருமே அற்புதமாக விளையாடி வெற்றிக்கு உதவியுள்ளார்கள்.

மெல்போர்ன் டெஸ்டில் முதல் நாளன்று டாஸில் தோற்றது. இதனால் கடைசியாக பேட்டிங் செய்ய வேண்டிய நிலைமை. ஆனால் ஓர் அணிக்கு என்னென்ன தடைகள் நேருமோ அத்தனையும் மெல்போர்ன் டெஸ்டில் எதிர்கொண்ட இந்திய அணி, எதையும் பொருட்படுத்தாமல் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

இதைவிட இன்னொரு மகத்தான டெஸ்ட் வெற்றியை இந்திய கிரிக்கெட்டால் சந்திக்க முடியாது என்றுதான் தோன்றுகிறது. ரஹானேவும் இந்திய அணியும் தொடர்ந்து சாதிப்பார்கள். 10 நாள்களுக்குள் இப்படியொரு மாற்றம் ஏற்படும் நாம் நினைக்கவில்லை. ஆனால் இந்திய அணிக்கு இந்த நம்பிக்கையும் லட்சியமும் இருந்திருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.