ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

பணம் இல்லாமல் கிரிக்கெட்டை நடத்த முடியாது: அனுராக் தாக்கூர் பதிலடி!

பிசிசிஐக்கு வர வேண்டிய பணவரவு இல்லா விட்டால் கிரிக்கெட் போட்டிகளை தொடர்ந்து நடத்த முடியாது என்று பிசிசிஐயின் தலைவர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :4 அக்டோபர் 2016, 12:37 pm

DIN

புதுதில்லி: பிசிசிஐக்கு வர வேண்டிய பணவரவு இல்லா விட்டால் கிரிக்கெட் போட்டிகளை தொடர்ந்து நடத்த முடியாது என்று பிசிசிஐயின் தலைவர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 30-ஆம் தேதி நடந்த பிசிசிஐயின் சிறப்பு பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட நிதி தொடர்பான முடிவுகளின்  படி, அதன் உறுப்பு அமைப்புகளுக்கு பணப்பட்டுவாடா செய்வதை நிறுத்தி வைக்குமாறு பிசிசிஐ கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு லோதா கமிட்டி கடிதம் எழுதியுள்ளது.

இதன் காரணமாக எழுந்துள்ள சூழ்நிலை குறித்து பிசிசிஐயின் தலைவர் அனுராக் தாக்கூர் தில்லியில் இன்று செய்தியாளர்களிடம்  கூறியதாவது:

பிசிசிஐயின் உறுப்பு அமைப்புகள்  அனைத்தும் தத்தமது மாநிலங்களில் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கு பிசிசிஐஐ அளிக்கும் நிதியை சார்ந்துள்ளன. அனால் அவர்களுக்கு இன்று பணத்தை பரிமாற்றம் செய்ய இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது.

நியூசிலாந்து தொடரின் நிலை என்ன ஆகும் என்று இப்போதைக்கு சொல்ல முடியாது. ஆனால் நமது அணி சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த நிலையில் இத்தகைய விஷயம் மோசமான விளைவுகளையே உண்டாக்கும்.

பணம் இல்லாமல் நாம் கிரிக்கெட் போட்டிகளை நடத்த இயலாது.. பிசிசிஐ மத்திய அரசிடம் இருந்தோ,  அல்லது எந்த மாநில அரசிடம் இருந்தோ நிதிபெறுவதில்லை.

இவ்வாறு தாக்கூர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.