இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி, செப்டம்பர் 30-ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. இது இந்திய அணி உள்நாட்டில் விளையாடுகிற 250-வது டெஸ்ட் போட்டி.
இதனையொட்டி சில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி லார்ட்ஸ் மைதானத்தில் உள்ள நடைமுறைபோல, ஈடன் கார்டன்ஸிலும் மணியடித்து போட்டி தொடங்க உள்ளது. 30-ம் தேதியன்று கபில் தேவ் மணியடித்து டெஸ்ட் போட்டியைத் தொடங்கிவைப்பார்.
இதற்காக ஈடன் கார்டன்ஸில் வெள்ளியால் பூசப்பட்ட பெரிய மணி ஒன்று தொங்கவிடப்பட்டுள்ளது. அதேபோல டாஸுக்கும் தங்க நாணயம் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.