லார்ட்ஸ் பாரம்பரியத்தைத் தொடரும் ஈடன் கார்டன்ஸ்!

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி, செப்டம்பர் 30-ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது.
லார்ட்ஸ் பாரம்பரியத்தைத் தொடரும் ஈடன் கார்டன்ஸ்!
Updated on
1 min read

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி, செப்டம்பர் 30-ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. இது இந்திய அணி உள்நாட்டில் விளையாடுகிற 250-வது டெஸ்ட் போட்டி.

இதனையொட்டி சில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி லார்ட்ஸ் மைதானத்தில் உள்ள நடைமுறைபோல, ஈடன் கார்டன்ஸிலும் மணியடித்து போட்டி தொடங்க உள்ளது. 30-ம் தேதியன்று கபில் தேவ் மணியடித்து டெஸ்ட் போட்டியைத் தொடங்கிவைப்பார்.

இதற்காக ஈடன் கார்டன்ஸில் வெள்ளியால் பூசப்பட்ட பெரிய மணி ஒன்று தொங்கவிடப்பட்டுள்ளது. அதேபோல டாஸுக்கும் தங்க நாணயம் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com