நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் கம்பீர், ஜெயந்த் யாதவ்!

ராகுலுக்குப் பதிலாக, கெளதம் கம்பீர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்...

News image
Updated On :28 செப்டம்பர் 2016, 5:13 am

DIN

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 197 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா. 500-வது டெஸ்டில் வெற்றி கண்டதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது இந்தியா. 

இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ராகுல் காயமடைந்துள்ளார். இதனால் அவர் 2-வது டெஸ்ட் போட்டியில் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக, கெளதம் கம்பீர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தத் தகவலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. துலீப் டிராபியில் சிறப்பாக விளையாடியதால் கம்பீர் மீண்டும் இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ளார். இதற்கு முன்பு கடைசியாக 2014ல், இந்திய அணிக்காக விளையாடினார் கம்பீர். அதன்பிறகு விஜய், தவண், ராகுல் ஆகிய மூன்று பேருமே தொடக்க வீரர்களாக விளையாடி வருகிறார்கள். 

மேலும் சிக்கன்குனியாவால் பாதிக்கப்பட்டுள்ள இஷாந்த் சர்மாவும் இரண்டாவது டெஸ்டில் விளையாடமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்குப் பதிலாக சுழற்பந்து வீச்சாளர் ஜெயந்த் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.