அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

டெஸ்ட் தரவரிசை: முதலிட முனைப்பில் இந்தியா

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி மீண்டும் முதலிடத்தை நெருங்கியுள்ளது.

Updated On :28 செப்டம்பர் 2016, 12:37 am IST

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி மீண்டும் முதலிடத்தை நெருங்கியுள்ளது.
கான்பூர் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிரான வெற்றியின் மூலம் தரவரிசைப் பட்டியலில் 110 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தில் உள்ளது இந்திய அணி. இந்நிலையில், நியூஸிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டி வரும் வெள்ளிக்கிழமை கொல்கத்தாவில் தொடங்கவுள்ளது.
இதில் இந்திய அணி வெல்லும் பட்சத்தில் பாகிஸ்தானை (111 புள்ளிகள்) பின்னுக்குத்தள்ளி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி மீண்டும் முதலிடம் பிடிக்கும்.
இதனிடையே, கான்பூர் டெஸ்டில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்த சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி 2-ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.
கொல்கத்தா டெஸ்டில் அஸ்வின் சிறப்பாக செயல்படும் பட்சத்தில், பந்துவீச்சாளர்கள் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயினை பின்னுக்குத்தள்ளி அவர் முதலிடம் பிடிப்பார்.
பேட்ஸ்மேன்கள் பட்டியலில், லோகேஷ் ராகுல் 5 இடங்கள் முன்னேறி 57-ஆவது இடத்துக்கும், ரோஹித் சர்மா 2 இடங்கள் முன்னேறி 52-ஆவது இடத்துக்கும் வந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.