நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

இந்திய அணியில் ஆதிக்கம் செலுத்தும் குஜராத் வீரர்கள்!

இதையடுத்து இந்திய அணியில் குஜராத் வீரர்களின் எண்ணிக்கை நான்கு ஆக உயர்ந்துள்ளது...

News image
Updated On :9 ஆகஸ்ட் 2017, 1:08 pm IST

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவுக்குப் பதிலாக அக்‌ஷர் படேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 30 ஒருநாள், 7 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அக்‌ஷர் படேல், இதுவரை டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகவில்லை. இதையடுத்து இந்திய அணியில் குஜராத் வீரர்களின் எண்ணிக்கை நான்கு ஆக உயர்ந்துள்ளது. 

இந்திய டெஸ்ட் அணியில் அதிக வீரர்களைக் கொண்ட மாநிலமாக குஜராத் உள்ளது. புஜாரா, ஜடேஜா, ஹார்திக் பாண்டியா, அக்‌ஷர் படேல் ஆகியோர் குஜராத்தைச் சேர்ந்த வீரர்கள். இவர்களை அடுத்து, டெல்லி வீரர்கள் 3 பேர் (கோலி, தவன், இஷாந்த் சர்மா) இந்திய அணியில் அதிகமாக உள்ளார்கள். 

இந்திய அணி: கே.எல்.ராகுல் (கர்நாடகா), ஷிகர் தவன் (டெல்லி), சேதேஷ்வர் புஜாரா (குஜராத்), விராட் கோலி (டெல்லி), அஜிங்க்ய ரஹானே (மும்பை), அஸ்வின் (தமிழ்நாடு), விருத்திமான் சாஹா (மேற்கு வங்கம்), குல்தீப் யாதவ் (உத்தர பிரதேசம்), உமேஷ் யாதவ் (மஹாராஷ்டிரா), முகமது சமி (மேற்கு வங்கம்), புவனேஸ்வர் குமார் (உத்தர பிரதேசம்), அபினவ் முகுந்த் (தமிழ்நாடு), ஹார்திக் பாண்டியா (குஜராத்), அக்‌ஷர் படேல் (குஜராத்), இஷாந்த் சர்மா (டெல்லி), ரோஹித் சர்மா (மும்பை), ஜடேஜா (குஜராத்).

இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான இடையிலான 3-ஆவது டெஸ்ட் போட்டி வரும் 12-ஆம் தேதி பல்லகெலேவில் தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.