சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

அப்பாடா! தொடர் சொதப்பல்களை ஒருவழியாக முடிவுக்குக் கொண்டுவந்த ரோஹித் சர்மா!

இந்த அரை சதத்தின் மூலம் தொடர் சொதப்பல்களுக்கு ஒரு முடிவு கட்டியிருக்கிறார் ரோஹித் சர்மா... 

News image
Updated On :25 ஆகஸ்ட் 2017, 7:05 am

சநகன்

இலங்கைக்கு எதிரான 2-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா. ஒரு கட்டத்தில் இந்திய அணி 21.5 ஓவர்களில் 131 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் இந்தியா தோற்றுவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 7-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த தோனியும், புவனேஸ்குமாரும் அபாரமாக ஆடி வெற்றி தேடித்தந்தனர். இந்த ஜோடி 100 ரன்கள் சேர்த்தது. இதுதான் 8-ஆவது விக்கெட்டுக்கு இந்தியா எடுத்த அதிகபட்ச ரன். புவனேஸ்வர் குமார் 80 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 53, தோனி 68 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்தப் போட்டியில் இந்தியத் தொடக்க வீரர் ரோஹித் சர்மா அரை சதம் எடுத்தார். ரோஹித் சர்மா அதிரடியாக ரன் சேர்க்க, 10 ஓவர்களில் 64 ரன்களை எட்டியது இந்தியா. தொடர்ந்து அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா 43 பந்துகளில் அரை சதமடிக்க, 15 ஓவர்களில் 102 ரன்களை எட்டியது இந்தியா. ரோஹித் சர்மா 45 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் சேர்த்து தனஞ்ஜெயா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா-தவன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 15.3 ஓவர்களில் 109 ரன்கள் குவித்தது.

இந்த அரை சதத்தின் மூலம் தொடர் சொதப்பல்களுக்கு ஒரு முடிவு கட்டியிருக்கிறார் ரோஹித் சர்மா. உலகமெல்லாம் ரோஹித் சர்மா சாதித்துக் காட்டினாலும் இலங்கை மட்டும் அவருக்கு ராசியில்லாததாக உள்ளது. இந்தப் போட்டிக்கு முன்பு இலங்கையில் அவர் விளையாடிய 10 ஆட்டங்களில் அவர் 37 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். சராசரி 3.70. (4, 0, 11, 5, 5, 0, 0, 4, 4, 4).

இந்நிலையில்தான் நேற்றைய ஆட்டத்தில் அவர் அரை சதம் எடுத்து தன்னுடைய துரதிர்ஷ்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இலங்கையில் அவர் கடந்த 10 இன்னிங்ஸ்களிலும் எடுத்த ரன்களை விடவும் இந்த ஆட்டத்தில் கூடுதல் ரன்கள் எடுத்துள்ளார். தொடரட்டும் அவருடைய வெற்றிக் கணக்கு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.