மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விராட் கோலிக்கு மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் பாராட்டு!

ஆணோ பெண்ணோ சர்வதேச கிரிக்கெட்டில் நல்ல உடற்தகுதியுடன் இருக்கவேண்டிய கட்டாயம் உள்ளது...

News image
Updated On :1 டிசம்பர் 2017, 10:13 am

எழில்

சிஎன்என்-நியூஸ் 18 தொலைக்காட்சியின் 2017-ம் ஆண்டுக்கான சிறந்த இந்தியர் விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ், தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

தற்போது மக்களை எங்களை அடையாளம் கண்டுகொள்கிறார்கள். மகளிர் கிரிக்கெட்டுக்கு இந்தியாவில் மதிப்பு கிடைத்துள்ளது.

ஒருவர் மட்டும் அல்ல, என்னைத் தினமும் பலர் ஊக்கப்படுத்துகிறார்கள். சிலருடைய பெயரைக் குறிப்பிட்டே ஆகவேண்டும் என்றால் விராட் கோலியைச் சொல்வேன். அவர் தன் உடற்தகுதி மீது மிகுந்த அக்கறை செலுத்துகிறார். நானும் உடற்தகுதியில் கவனம் செலுத்த விராட் கோலிதான் காரணம். ஆணோ பெண்ணோ சர்வதேச கிரிக்கெட்டில் நல்ல உடற்தகுதியுடன் இருக்கவேண்டிய கட்டாயம் உள்ளது. நாங்கள் எங்கள் திறமையை வெளிப்படுத்த விராட் கோலி எங்களுக்கு ஊக்கமாக இருந்துள்ளார். அவருக்கு எங்களுடைய பெரிய நன்றி என்று கூறியுள்ளார்.  

மிதாலி ராஜ், மகளிர் ஒரு நாள் கிரிக்கெட்டில் 6,000 ரன்கள் குவித்த முதல் வீராங்கனை என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார். இதுவரை 186 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள 34 வயதான மிதாலி ராஜ் 6,190 ரன்கள் குவித்துள்ளார். 1999-ல் அறிமுகப் போட்டியில் களமிறங்கியபோதே, அதில் சதமடித்து தனது திறமையை உலகுக்குக் காட்டியவர் மிதாலி ராஜ். ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிக அரை சதங்கள் விளாசியவர் என்ற சாதனையும் மிதாலி ராஜ் வசமேயுள்ளது.

கடந்த ஜூலை மாதம், மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி 4-வது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது இங்கிலாந்து. அதேநேரத்தில் இரண்டாவது முறையாக உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் விளையாடிய மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, முதல்முறையாக கோப்பையைக் கைப்பற்றி வரலாறு படைக்கும் வாய்ப்பை நழுவவிட்டது. மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிதாலி ராஜ் 409 ரன்கள் குவித்தார். ஐசிசி மகளிர் கனவு அணியின் கேப்டனாக அவர் தேர்வு செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.