கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மொகாலி ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற  இலங்கை பீல்டிங் தேர்வு; தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தருக்கு அணியில் இடம்! 

மொகாலியில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற  இலங்கை அணி பீல்டிங்கினைத் தேர்வு செய்துள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:20 pm

DIN

மொகாலி: மொகாலியில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற  இலங்கை அணி பீல்டிங்கினைத் தேர்வு செய்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி  3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. தர்மசாலாவில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் புதன்கிழமை நடக்கிறது. தொடரை இழப்பதைத் தவிர்க்க வேண்டுமானால் இந்தியா இந்த போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் திசாரா பெரேரா முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து இந்திய அணி தற்பொழுது பேட்டிங் செய்துவருகிறது.

இந்திய அணியில் முதன்முறையாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்துள்ளார். 'சைனாமென்' சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவுக்கு பதிலாக வாஷிங்டன்  சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார்.

சொந்த மண்ணில் இலங்கையுடன் ஒரு நாள் தொடரை இந்தியா இதுவரை இழந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி வீரர்கள் விவரம் வருமாறு:

ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் அய்யர், மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், எம்.எஸ். டோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா,  புவனேஸ்வர் குமார், வாஷிங்டன் சுந்தர், பும்ரா மற்றும் யுஸ்வேந்திர சாஹல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.