தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கார் விபத்தில் 67 வயது பெண்மணி பலி: கிரிக்கெட் வீரர் ரஹானேவின் தந்தை ஜாமீனில் விடுவிப்பு

பிரபல கிரிக்கெட் வீரர் ரஹானேவின் தந்தை மதுகர் பாபுராவ் ரஹானே (54) கார் விபத்து வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

News image
Updated On :15 டிசம்பர் 2017, 12:54 pm

எழில்

பிரபல கிரிக்கெட் வீரர் ரஹானேவின் தந்தை மதுகர் பாபுராவ் ரஹானேவை (54) காவல்துறை இன்று கைது செய்தது.

மஹாராஷ்டிராவில் உள்ள தர்கர்லி கடற்கரைக் கிராமத்துக்குச் செல்வதற்காக புனே - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கோல்ஹாபூர் வழியாகத் தனது குடும்பத்தினருடன் காரில் சென்றுள்ளார் மதுகர்.

இன்று காலையில் கோல்ஹாபூரின் காகல் பகுதியில் சாலையில் நின்றுகொண்டிருந்த வயதானப் பெண்மணி மீது மதுகர் ஓட்டி வந்த கார் பலமாக மோதியது.

இதில் படுகாயமடைந்த ஆஷாதய் கம்ப்ளே என்கிற 67 வயதுப் பெண் உடனடியாக அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 

இதையடுத்து ரஹானாவின் தந்தை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.