முன்கூட்டியே நடக்கவுள்ள டி20 போட்டிகள்: ஐபிஎல் ஏலத்தை முன்னிட்டு பிசிசிஐ புதிய ஏற்பாடு!
சையத் முஸ்டாக் அலி டி20 போட்டி, பிப்ரவரி 4 முதல் 10 வரை நடைபெறுவதாக இருந்தது...


2018-ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் ஜனவரி 27, 28 தேதிகளில் நடைபெறவுள்ளது. இதையொட்டி உள்ளூர் டி20 போட்டிகளை முன்கூட்டியே தொடங்க பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளது.
ஜனவரி 21 முதல் 29 வரை நடைபெறுவதாக இருந்த மண்டலங்களுக்கு இடையிலான டி20 போட்டி தற்போது ஜனவரி 8 முதல் 16 வரை நடைபெறவிருக்கிறது.
அதேபோல சையத் முஸ்டாக் அலி டி20 போட்டி, பிப்ரவரி 4 முதல் 10 வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்தப் போட்டி ஜனவரி 21 முதல் 27 வரை நடைபெறவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
பிசிசிஐயின் இந்த அறிவிப்பு இந்தியாவில் உள்ள கிரிக்கெட் வீரர்களுக்குப் புதிய உற்சாகத்தை அளித்துள்ளது. இந்த இரு போட்டிகள் மூலம் புதிய திறமைகளை அறிந்துகொள்ள ஐபிஎல் அணிகளுக்கும் ஒரு நல்ல சந்தர்ப்பம் உருவாகும். இந்தப் போட்டிகளில் சிறப்பாக விளையாடுபவர்களை ஏலத்தில் தேர்வு செய்யவும் உதவியாக இருக்கும். மேலும், இரு டி20 போட்டிகளுக்கும் அதிகக் கவனம் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...