2018 காமன்வெல்த் போட்டிகளுக்கு சாக்ஷி மாலிக் தகுதி

2018-ம் ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகளுக்கு மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், சனிக்கிழமை தகுதி பெற்றார்.
2018 காமன்வெல்த் போட்டிகளுக்கு சாக்ஷி மாலிக் தகுதி
Updated on
1 min read

2018-ம் ஆண்டு ஏப்ரல் 4-ந் தேதி தொடங்கி 15-ந் தேதி வரை காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.

இதற்கான மல்யுத்த விளையாட்டு தகுதிச் சுற்றுப் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில், ஆடவர் பிரிவில் டிசம்பர் 29-ந் தேதி நடைபெற்ற 74 கிலோ எடைப் பிரிவு தகுதிச் சுற்றுப்போட்டியில் ஜிதேந்தர் குமாரை வீழ்த்தி சுஷில் குமார் தகுதி பெற்றார்.

இந்நிலையில், மகளிர் பிரிவில் நடைபெற்ற 62 கிலோ எடைப் பிரிவில் நட்சத்திர வீராங்கனை சாக்ஷி மாலிக், டிசம்பர் 30-ந் தேதி தகுதி பெற்றார். இவர், ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றவர் ஆவார்.

மேலும், ஒலிம்பிக் போட்டிகளில் மல்யுத்த பிரிவில் பதக்கம் வென்ற ஒரே வீராங்கனை என்ற சாதனைக்கும் சொந்தக்காரர்.

அதுமட்டுமல்லாமல், 50 கிலோ எடைப் பிரிவில் வினேஷ் போகத், 57 கிலோ எடைப் பிரிவில் பூஜா தண்டா, 54 கிலோ எடைப் பிரிவில் பபிதா குமாரி, 68 கிலோ எடைப் பிரிவில் திவ்யா கரண், 76 கிலோ எடைப் பிரிவில் கிரண் ஆகியோரும் 2018 காமன்வெல்த் மல்யுத்தப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com