ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

உலகக் கோப்பை தகுதிச் சுற்று: இறுதிச் சுற்றில் இந்திய மகளிர்

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் தகுதிச் சுற்றில் இந்திய அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

News image
Updated On :19 பிப்ரவரி 2017, 7:20 pm

DIN

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் தகுதிச் சுற்றில் இந்திய அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்ததன் மூலம் "ஏ' பிரிவில் முதலிடம் பிடித்து இறுதிச் சுற்றை உறுதி செய்தது.
முன்னதாக முதலில் பேட் செய்த பாகிஸ்தான், இந்தியாவின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் 43.4 ஓவர்களில் 67 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக ஆயிஷா ஜாபர் 19 ரன்கள் எடுத்தனர்.
இந்தியத் தரப்பில் இக்தா பிஸ்தா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் பேட் செய்த இந்திய அணி 22.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. தீப்தி சர்மா ஆட்டமிழக்காமல் 29 ரன்களும், ஹர்மான்பிரீத் கெளர் 24 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தனது இறுதிச் சுற்றில் தென் ஆப்பிரிக்காவை சந்திக்கிறது. இந்த ஆட்டம் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.