பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

முதல் டெஸ்ட்: ராகுல் விலகல்! அபினவ் முகுந்துக்கு வாய்ப்பு!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து தொடக்க வீரர் ராகுல் விலகியுள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:30 pm

எழில்

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து தொடக்க வீரர் ராகுல் விலகியுள்ளார்.

இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், காய்ச்சல் காரணமாக ராகுலுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து அவர் முழுமையாக மீளவில்லை. இதையடுத்து அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அபினவ் முகுந்த் - ஷிகர் தவன் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாகக் களமிறங்கவுள்ளார்கள்.

இந்தியா-இலங்கை இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 26-ஆம் தேதி காலேவில் தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.