

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரஃபேல் நடால், வாவ்ரிங்கா ஆகிய இருவரும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்கள்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற அரையிறுதியில் நடால் 6-3, 6-4, 6-0 என்ற நேர் செட்களில் டொமினிக் தீமை வீழ்த்தினார்.
மற்றொரு அரையிறுதியில் ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா 6-7 (6), 6-3, 5-7, 7-6 (3), 6-1 என்ற செட் கணக்கில் உலகின் முதல் நிலை வீரரான ஆன்டி முர்ரேவை வீழ்த்தினார்.
இதையடுத்து இறுதிச்சுற்றில் வாவ்ரிங்காவை எதிர்கொள்கிறார் நடால்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.