அரையிறுதிப் போட்டி: இந்தியா பந்துவீச்சு!

எக்பாஸ்டனில் இன்று நடைபெற்றுவரும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது அரையிறுதியில்
அரையிறுதிப் போட்டி: இந்தியா பந்துவீச்சு!
Updated on
1 min read

எக்பாஸ்டனில் இன்று நடைபெற்றுவரும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது அரையிறுதியில் இந்தியாவும், வங்கதேசமும் மோதுகின்றன.

நடப்பு சாம்பியனான இந்திய அணி, வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவதில் தீவிரமாக உள்ளது. அதேநேரத்தில் வங்கதேச அணி கடினமான பிரிவில் இடம்பெற்றிருந்தபோதிலும், அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதுதவிர பலம் வாய்ந்த நியூஸிலாந்து அணியையும் தோற்கடித்துள்ளது. கணிக்க முடியாத வகையில் விளையாடி வரும் அந்த அணியையும் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. வங்கதேசம் இறுதிச் சுற்றுக்கு முன்னேறுமானால், அது அந்த அணிக்கு மிகப்பெரிய வரலாறாக அமையும்.

டாஸ் வென்ற அணி இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com