டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

உலக ஹாக்கி லீக் அரையிறுதி : பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா

உலக ஹாக்கி லீக் அரையிறுதியில் இந்திய அணி தனது 3-ஆவது ஆட்டத்தில் 7-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை தோற்கடித்தது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:47 pm

DIN

உலக ஹாக்கி லீக் அரையிறுதியில் இந்திய அணி தனது 3-ஆவது ஆட்டத்தில் 7-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை தோற்கடித்தது.
இதன்மூலம் தொடர்ந்து 3-ஆவது வெற்றியைப் பெற்றுள்ள இந்திய அணி, காலிறுதியை உறுதி செய்தது. அதேநேரத்தில் தொடர்ந்து 3-ஆவது தோல்வியைச் சந்தித்த பாகிஸ்தான் காலிறுதி வாய்ப்பை இழந்தது.
லண்டனில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின. இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய இந்திய அணி 13-ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது. இந்த கோலை ஹர்மான்பிரீத் சிங் அடித்தார். இதையடுத்து தல்விந்தர் சிங் 21 மற்றும் 24-ஆவது நிமிடங்களில் கோலடிக்க, இந்தியா 3-0 என முன்னிலை பெற்றது.
33-ஆவது நிமிடத்தில் ஹர்மான்பிரீத் சிங் தனது 2-ஆவது கோலை அடிக்க, 47-ஆவது நிமிடத்தில் ஆகாஷ்தீப் சிங் கோலடித்தார். அதைத் தொடர்ந்து 49-ஆவது நிமிடத்தில் பிரதீப் மோர் கோலடிக்க, இந்தியா 6-0 என முன்னிலை பெற்றது.
அதேநேரத்தில் மறுமுனையில் போராடிய பாகிஸ்தான் 57-ஆவது நிமிடத்தில் கோலடிக்க, 59-ஆவது நிமிடத்தில் 7-ஆவது கோலை அடித்தது இந்தியா. இந்த கோலை ஆகாஷ்தீப் சிங் அடித்தார். இதன்மூலம் இந்தியா 7-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வென்றது.
இதுவரை விளையாடிய 3 ஆட்டங்களிலும் வெற்றி கண்டதன் மூலம் 'பி' பிரிவில் முதலிடத்துக்கு முன்னேறியிருக்கும் இந்தியா, காலிறுதியை உறுதி செய்துள்ளது. இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் நெதர்லாந்தை சந்திக்கிறது. இந்த ஆட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
கறுப்பு பட்டை அணிந்து விளையாடிய இந்தியர்கள்!
எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்திய வீரர்கள் தங்களின் கையில் கறுப்பு பட்டை அணிந்து விளையாடினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.