தென் ஆப்பிரிக்க டி20 அணியின் உரிமையாளர் ஆன ஷாருக் கான்! 

நட்சத்திர வீரர்களான ரபடாவும் டுமினியும் முறையே ஜோகன்னஸ்பர்க், கேப் டவுன் அணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
தென் ஆப்பிரிக்க டி20 அணியின் உரிமையாளர் ஆன ஷாருக் கான்! 
Updated on
1 min read

ஐபிஎல் போல தென் ஆப்பிரிக்காவிலும் டி20 குளோபல் லீக் என்றொரு டி20 லீக் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டிக்கான அணிகளின் ஏலம் நேற்று நடைபெற்றது. 

இதில் டெல்லி ஐபிஎல் அணி உரிமையாளரான ஜி.எம்.ஆர். குழுமம், ஜோகன்னஸ்பர்க் அணியை வாங்கியது. அதேபோல கொல்கத்தா ஐபிஎல் உரிமையாளரான ஷாருக் கான் கேப் டவுன் அணியை ஏலத்தில் தேர்ந்தெடுத்தார். 

8 அணிகள் போட்டியிடும் இந்தப் போட்டி நவம்பர் - டிசம்பரில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கு உரிய வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் ஏலம் ஆகஸ்ட் 19 அன்று நடைபெறும். 

நட்சத்திர வீரர்களான ரபடாவும் டுமினியும் முறையே ஜோகன்னஸ்பர்க், கேப் டவுன் அணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com