தீர்ந்தது குழப்பம்: சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்தியா பங்கேற்பு!
வரும் ஜுன் ஒன்றாம் தேதி துவங்க இருக்கின்ற சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்திய அணி பங்கேற்கும் ...


புதுதில்லி: வரும் ஜுன் ஒன்றாம் தேதி துவங்க இருக்கின்ற சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்திய அணி பங்கேற்கும் என இந்திய கிரிக்கெட் வாரியம் தற்பொழுது உறுதி செய்து உள்ளது.
உறுப்பு நாடுகளுக்கான வருமானப் பகிர்வு முறையில் மாற்றம் செய்ய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) எடுத்த முடிவின் காரணமாக வரும் ஜுன் ஒன்றாம் தேதி துவங்க இருக்கின்ற சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்தியா பங்கேற்குமா அல்லது தனது எதிர்ப்பைப் பதிவு செய்ய புறக்கணிப்பில் ஈடுபடுமா என்ற சந்தேகம் நிலவி வந்தது.
இதனிடையே சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடருக்கான இந்திய அணியை உடனடியாக தேர்வு செய்து அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி, கட்டுப்பட்டு வாரிய நிர்வாகிகளுக்கு கடிதம் எழுதியது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் தில்லியில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் நீண்ட விவாதத்திற்கு பிறகு சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்திய அணி பங்கேற்கும் என முடிவு செய்யப்பட்டு உள்ளது.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிசிசிஐ செயலாளர் ராஜீவ் சுக்லா, “சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இந்திய அணியை அனுப்புவது என்று ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது; இதற்கான வீரர் தேர்வுக்காக தேர்வுக்குழு கூட்டம் நாளை நடக்கிறது" என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...