6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தோனியின் ஆட்டத்தில் முன்னேற்றம் இல்லாவிட்டால் மாற்று வீரரைத் தேர்வு செய்ய கங்குலி யோசனை!

வருங்காலத்தில் தோனியால் தன் ஆட்டத்தில் முன்னேற்றத்தைக் கொண்டுவரமுடியாவிட்டால் அணி நிர்வாகம் மாற்று ஏற்பாடுகளுக்கு..

News image
Updated On :9 நவம்பர் 2017, 5:38 am

எழில்

வருங்காலத்தில் தோனியால் தன் ஆட்டத்தில் முன்னேற்றத்தைக் கொண்டுவரமுடியாவிட்டால் அணி நிர்வாகம் மாற்று ஏற்பாடுகளுக்கு ஆயத்தமாகவேண்டும் என்று முன்னாள் கேப்டன் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா-நியூஸிலாந்து டி20 தொடர் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. இந்தத் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்தியா வெற்றி பெற்றது. குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் நடைபெற்ற 2-ஆவது டி20 ஆட்டத்தில் தோனி 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து வெற்றி பெற்றது. இதையடுத்து, டி20 போட்டிகளில் இளைஞர்களுக்கு வழிவிடுவது குறித்து முன்னாள் கேப்டன் தோனி சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லஷ்மண் தெரிவித்திருந்தார். அணியில் தோனியின் பங்களிப்பை அவருக்கு குழு மேலாண்மை புரிய வைக்க வேண்டும் என்று முன்னாள் அதிரடி வீரர் சேவாக்கும் கருத்து தெரிவித்திருந்தார்.

முன்னாள் கேப்டன் கங்குலி இந்த விவகாரம் குறித்துக் கூறியதாவது: இந்திய அணி நிர்வாகம், தோனியுடன் அமர்ந்து அணியில் அவருக்குண்டான பொறுப்புகள் குறித்து விவாதிக்கவேண்டும். டி20 கிரிக்கெட்டில் அவர் ஒரு பெரிய வீரர். ஏதாவது முடிவு எடுக்கும் முன்பு, அவர் தன்னை மீண்டும் நிரூபிக்க சரியான வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும் என்றார். 2019 உலகக்கோப்பை குறித்தும் அணி நிர்வாகம் யோசிக்கவேண்டும். வருங்காலத்தில் தோனியால் தன் ஆட்டத்தில் முன்னேற்றத்தைக் கொண்டுவரமுடியாவிட்டால் அணி நிர்வாகம் மாற்று ஏற்பாடுகளுக்கு ஆயத்தமாகவேண்டும்.

நான் பல ஆண்டுகளாகக் கூறிக்கொண்டிருக்கிறேன். தோனி, 4-ம் நிலையில் களமிறங்கவேண்டும். அப்போதுதான் அவர் முதலில் தாமதமாக ரன்கள் சேர்த்து பிறகு அதிரடியாக விளையாட பொருத்தமாக இருக்கும். தோனிக்கு ஆதரவாக கோலி பேசியிருப்பது முக்கியமான விஷயம். தோனி சரியாக விளையாடாத சமயத்தில் கோலி உதவியிருக்கிறார். அந்த நம்பிக்கையைக் காப்பாற்றும் விதமாக தோனி நிறைய ரன்கள் எடுக்க்கவேண்டும் என்று கங்குலி கூறியுள்ளார்.

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், தோனிக்கு ஆதரவாக கோலி இவ்வாறு கருத்து தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: சிலர் தோனி குறித்து மட்டும் விமர்சித்து வருவது ஏன்? என்று எனக்குப் புரியவில்லை. பேட்ஸ்மேனாக நான் சோபிக்கவில்லை எனில் எந்த விமர்சனங்களும் எழுவதில்லை. ஒருவேளை நான் 35 வயதுக்குள் இருப்பதால் விமர்சனங்கள் எழாமல் இருக்கலாம். ஒவ்வோர் ஆட்டத்திலும் சிறப்பான பங்களிப்பையும், கடின உழைப்பையும் தோனி அளித்து வருகிறார். அணியில் தன்னுடைய பங்களிப்பு என்ன என்பது அவருக்குத் தெரியும். விமர்சிப்பவர்களுக்கு மிகவும் பொறுமை தேவை என்றார் கோலி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.