6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அனைவருக்கும் கருத்துக் கூற உரிமை உண்டு: விமர்சனங்களுக்கு 'கேப்டன் கூல்' எதிர்வினை! 

நம்மைப் பற்றி அனைவருக்கும் கருத்துக் கூற உரிமை உண்டு; அவை மதிக்கப்பட வேண்டும் என்று தனது விளையாட்டுத் திறன்  மீதான விமர்சனங்களுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி... 

News image
Updated On :12 நவம்பர் 2017, 9:59 am

DIN

துபை: நம்மைப் பற்றி அனைவருக்கும் கருத்துக் கூற உரிமை உண்டு; அவை மதிக்கப்பட வேண்டும் என்று தனது விளையாட்டுத் திறன்  மீதான விமர்சனங்களுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி பதில் கூறியுள்ளார்.   

சமீபத்தில் முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தோணி சரியாக விளையாடவில்லை என்றும்,  இளையவர்களுக்கு வழி விட்டு அவர் ஓய்வு பெற வேண்டும் என்று விமர்சனங்கள் எழுந்தன. அஜித் அகார்க்கர் உள்ளிட்டோர் அவரது பேட்டிங் குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர்.

இந்நிலையில் துபையில் தனது குளோபல் கிரிக்கெட் அகாடமியைத் தோணி நேற்று திறந்து வைத்தார். அப்பொழுது அவரிடம் இது குறித்து கேட்கப்பட்ட பொழுது, அவர் கூறிய பதிலாவது:

இங்கு அனைவருக்கும் கருத்து கூற உரிமை உள்ளது, அது மதிக்கப்பட வேண்டியது அவசியம். என்னைப் பொறுத்த வரை இந்திய கிரிக்கெட் அணியின் ஒரு அங்கமாக இருப்பதே மிகப்பெரிய உத்வேகம். பலர் மிகத்தொலைவு வரை இந்த விளையாட்டில் சென்றுள்ளனர். அதற்கு காரணம் அவர்களுக்கு இந்திய அணி மீதும் கிரிக்கெட் மீதும் உள்ள ஆர்வம்தான். அனைவரும் நாட்டுக்கு ஆடிவிட முடியாது. பயிற்சியாளர்கள் இதனைத்தான் கண்டுபிடிக்க வேண்டும். .

எனது கிரிக்கெட் அகாதமியைப் பொறுத்தவரை, நான் எப்போதுமே முடிவுகளை விட வழிமுறைகளையே பெரிதும் நம்புபவன். நான் ஒருபோதும் முடிவுகள் பற்றிக் கவலைப்பட்டதில்லை. நான் எது சரி என்று படுகிறதோ அதைத்தான் இதுவரை செய்து வந்துள்ளேன்.

அந்தச் சூழ்நிலையில் எத்தனை பந்துகளில் எத்தனை ரன்கள் தேவையாக இருந்தாலும்  எது சரியானதோ அதைத்தான் செய்வேன். நான் வழிமுறைகளிலேயே ஆழ்ந்து விடுபவன். முடிவுகள் பற்றிய சுமையை நான் சிந்திப்பதில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.