ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பாகிஸ்தானில் டி20 போட்டியில் விளையாட மறுத்து கடிதம் கொடுத்த இலங்கை அணி! 

பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தானுக்கு சென்று டி20 போட்டியில் விளையாட இலங்கை அணி வீரர்கள் மறுத்து விட்டனர்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 5:53 pm

DIN

கொழும்பு: பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தானுக்கு சென்று டி20 போட்டியில் விளையாட இலங்கை அணி வீரர்கள் மறுத்து விட்டனர்.

இலங்கை கிரிக்கெட் அணி 2009–ம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அப்பொழுது   அவர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். அதன் பிறகு சர்வதேச கிரிக்கெட் அணிகள் எதுவும் அந்நாட்டுக்கு செல்ல மறுத்து வருகின்றன.

இதன் காரணமாக அந்நாடு தனது சொந்த மண்ணுக்கு பதிலாக போட்டிகளை நடத்துவதற்கு ஐக்கிய அரபு அமீரகத்தினை தேர்ந்தெடுத்துள்ளது. அதன்படி தற்பொழுது அங்கு இலங்கை அணி பாகிஸ்தானுடன் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அதைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாட உள்ளது.

இதன் கடைசி டி20 ஓவர் போட்டியினை மட்டும் பாகிஸ்தானின் லாகூரில் (அக்டோபர் 29–ந்தேதி) நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. ஆனால் பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட இலங்கை வீரர்கள் தயங்குகிறார்கள்.

தற்பொழுது அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் மற்றும் இலங்கை கிரிக்கெட் வாரியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள வீரர்கள் அனைவரும் சேர்ந்து கையெழுத்திட்டு ஒரு கடிதத்தை இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் கொடுத்துள்ளனர்.

அதில் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட தாங்கள் விரும்பவில்லை என்றும், லாகூர் டி20 போட்டியை வேறு இடத்துக்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதன் காரணமாக மூன்றாவது ஆட்டமும் ஐக்கிய அரபு அமீரகத்திலேயே நடத்தப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. 

பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேச போட்டிகளை நடத்த பாகிஸ்தான் எடுத்த முயற்சிக்கு, இலங்கை அணியின் இந்த கடிதம் பெரும் பின்னடைவாக அமையும் என்று கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.