ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டம்: இந்திய அணியில் இரு தமிழக வீரர்கள்!
ஐபிஎல்-லில் கலக்கிய வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரஹில் ஷா ஆகிய இருவரும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால்...


இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 17-ம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 17-ம் தேதி பகலிரவாக நடைபெறுகிறது.
அதற்கு முன்பு செப்டம்பர் 12 அன்று ஆஸ்திரேலிய அணி சென்னையில் பயிற்சி ஆட்டம் ஒன்றில் பங்கேற்கிறது. பிசிசிஐ தலைவர் அணியுடன் மோதுகிறது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பிசிசிஐ தலைவர் அணியில் இரு தமிழ்நாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள். ஐபிஎல்-லில் கலக்கிய வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரஹில் ஷா ஆகிய இருவரும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் இந்த வாய்ப்பைப் பெற்றுள்ளார்கள். மேலும் அணியின் பயிற்சியாளராக முன்னாள் தமிழக வீரர் ஹேமங் பதானி அறிவிக்கப்பட்டுள்ளார்.
பிசிசிஐ தலைவர் அணி: ராகுல் திரிபாதி, மயங்க் அகர்வால், ஷிவம் செளத்ரி, நிதிஷ் ராணா, கோவிந்தா பொடார், குல்கீரத் மன் (கேப்டன்), ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி, அக்ஷய் கர்ணேஸ்வர், குல்வந்த் கெஜ்ரோலியா, குஷங் படேல், அவேஷ் கான், சந்தீப் சர்மா, வாஷிங்டன் சுந்தர், ரஹில் ஷா. பயிற்சியாளர்: ஹேமங் பதானி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...