சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

2019 உலகக் கோப்பை: இலங்கை அணி நேரடித் தகுதி!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் தோல்வியடைந்ததை அடுத்து...

News image
Updated On :29 ஜனவரி 2024, 5:41 pm

எழில்

2019 உலகக் கோப்பைப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறும் 8 அணிகளில் ஒன்றாக இலங்கை அணி இடம்பெற்றுள்ளது.

நேற்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் தோல்வியடைந்ததை அடுத்து இலங்கை அணி 2019 உலகக் கோப்பைப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற்றுள்ளது.

செப்டம்பர் 30 வரையிலான காலக்கெடுவுக்குள் மே.இ. தீவுகள் அணியால் (78 புள்ளிகள்) இலங்கையின் 86 புள்ளிகளைத் தாண்டமுடியாத நிலையில், இலங்கை அணி தகுதி பெற்றுள்ளது. 

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 4-0 அல்லது 5-0 என்கிற கணக்கில் ஜெயித்தால் மட்டுமே மே.இ. தீவுகள் அணியால் உலகக் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெறமுடியும் என்கிற நிலைமையில் நேற்றைய தோல்வி அதன்
திட்டங்களை முறியடித்துள்ளது. மேலும் அந்தத் தோல்வி இலங்கை அணிக்குச் சாதகமாகவும் அமைந்துவிட்டது. 

இந்நிலையில் ஆஸ்திரேலியா, இந்தியா, வங்கதேசம், இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை என 8 அணிகள் 2019 உலகக் கோப்பைப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. இந்தப் போட்டி 2019 மே 30 அன்று தொடங்கி ஜூலை 15 அன்று முடிவடைகிறது.

2018-ல் மே.இ. அணிகள், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, அயர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் தகுதிச்சுற்றுப் போட்டிகளில் கலந்துகொள்கின்றன. அதிலிருந்து 2 அணிகள் உலகக் கோப்பைப் போட்டிக்குக் கூடுதலாகத் தேர்வாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.