கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

கோபிசந்த் மகளுக்கு இரட்டை சாம்பியன் பட்டம்

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஜூனியர் கிராண்ட்ப்ரீ பாட்மிண்டன் போட்டியில் ஒற்றையர், இரட்டையர் என இரு பிரிவுகளிலும் இந்திய பாட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்தின் மகள் காயத்ரி சாம்பியன் பட்டம் வென்றார்.

Updated On :17 ஏப்ரல் 2017, 1:07 am IST

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்ற ஜூனியர் கிராண்ட்ப்ரீ பாட்மிண்டன் போட்டியில் ஒற்றையர், இரட்டையர் என இரு பிரிவுகளிலும் இந்திய பாட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்தின் மகள் காயத்ரி சாம்பியன் பட்டம் வென்றார்.

15 வயதுக்குள்ட்பட்டோருக்கான மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் காயத்ரி 21-11, 18-21, 21-16 என்ற செட் கணக்கில் சகநாட்டவரான சமியா பரூக்கியை தோற்கடித்தார்.
15 வயதுக்குள்பட்டோருக்கான மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிச் சுற்றில் காயத்ரி-சமியா பரூக்கி ஜோடி 21-17, 21-15 என்ற நேர் செட்களில் இந்தோனேசியாவின் கெல்லி லாரிஸா-ஷெலான்ட்ரி வியோலா ஜோடியைத் தோற்கடித்தது.
காயத்ரி, சமியா ஆகிய இருவரும் கோபிசந்த் அகாதெமியில் பயிற்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.