5 முறை சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி: காலிறுதியில் நார்வே!அதிபா் டிரம்ப்புடன் புதின், ஸெலென்ஸ்கி தொலைபேசியில் பேச்சு!உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கைபிகாா் இடைத்தோ்தல்: பிரசாந்த் கிஷோா் போட்டிமின் இணைப்புக்கு காத்திருக்கும் 60,120 விவசாயிகள்!இன்று கரையைக் கடக்கிறது புயல் சின்னம்!
/

பதவியேற்புக்கு இம்ரான் அழைத்தால் மத்திய அரசு அனுமதியுடன் கலந்துகொள்வேன்: கபில்தேவ்

இம்ரான் கான் பதவியேற்புக்கு முறைப்படி அழைப்பு வந்தால், நிச்சயம் மத்திய அரசின் அனுமதியுடன் கலந்துகொள்வேன் என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ், வியாழக்கிழமை தெரிவித்தார்.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2018, 4:42 pm IST

இம்ரான் கான் பதவியேற்புக்கு முறைப்படி அழைப்பு வந்தால், நிச்சயம் மத்திய அரசின் அனுமதியுடன் கலந்துகொள்வேன் என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ், வியாழக்கிழமை தெரிவித்தார்.

பாகிஸ்தானின் புதிய பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரரும், பிடிஐ கட்சித் தலைவருமான இம்ரான் கான், விரைவில் பதவியேற்கவுள்ளார். இதையடுத்து இந்தியாவில் உள்ள அவரது சமகால கிரிக்கெட் நண்பர்களுக்கு அழைப்பு விடுக்கவுள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்தியாவுடனான நல்லுறவை விரும்புவதாகவும், காஷ்மீர் விவகாரத்தை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறுகையில்,

இதுவரை எனக்கு அழைப்பு வந்துள்ளதா என்பது குறித்து இன்னும் பார்க்கவில்லை. ஒருவேளை அழைப்பு வந்தால் நிச்சயம் பாகிஸ்தான் சென்று இம்ரான் பதவியேற்பில் கலந்துகொள்வேன். மத்திய அரசின் அனுமதியுடன் இதில் நான் கலந்துகொள்வேன் என்றார்.

முன்னதாக, கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் மற்றும் பாலிவுட் நடிகர் அமீர்கான் ஆகியோருக்கு இம்ரான் கான் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்துள்ளார். அதுபோல கிரிக்கெட் வீரர் சித்துவுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். எனக்கு தனிப்பட்ட முறையில் இம்ரானிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதை பெருமையாக கருதுகிறேன் என்று சித்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.