கரூர் பலி! முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான மனு நாளை விசாரணை! உக்ரைன் தலைநகர் மீது ரஷியா ஏவுகனை, ட்ரோன் தாக்குதல்: 7 பேர் பலிதவெக கூட்டணியில் விசிக இடம்பெறும்! திருமாவளவன் அறிவிப்பு!பழனி செல்லும் பக்தர்களுக்கு ஜாக்பாட்! பல சேவைகளுக்கு முன்பதிவு வசதி தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு (ஜூலை 6, 2026) ஓய்வை அறிவித்தார் பிரபல பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர்! நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கல்வெட்டு அகற்றம்: திமுக கண்டனம்
/

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பின் காலிறுதி போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஓகுஹாராவை வீழ்த்தி பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2018, 10:39 pm IST

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பின் காலிறுதி போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஓகுஹாராவை வீழ்த்தி பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார். 

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில், மகளிர் ஒற்றையர் காலிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து நடப்பு சாம்பியனான ஜப்பான் வீராங்கனை நோஸோமி ஓகுஹாராவை எதிர்கொண்டார்.

இதில், பி.வி.சிந்து 21-17, 21-19 என்ற நேர் செட் கணக்கில் ஓகுஹாராவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். அவர் அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். 

சனிக்கிழமை நடைபெறும் அரையிறுதியில் பி.வி.சிந்து மற்றொரு ஜப்பான் வீராங்கனையான அகான் யமாகுச்சியை எதிர்கொள்ளவுள்ளார். 

  • அரையிறுதியில் எதிர்கொள்ளும் யமாகுச்சியிடம் கடந்த ஆண்டு நடைபெற்ற துபை சூப்பர் சீரிஸ் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்துள்ளார். 
  • அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினால், தொடர்ந்து 2-ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் பெருமையை பெறுவார். 
  • இதற்கு முன் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் பி.வி.சிந்து 2 வெண்கலம் மற்றும் 1 வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.