டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

விதிமீறலில் ஈடுபட்ட இஷாந்த் ஷர்மாவுக்கு ஐசிசி அபராதம்

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 

News image
Updated On :5 ஆகஸ்ட் 2018, 6:19 am

DIN

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி எட்பாஸ்டனில் ஆகஸ்டு 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்நிலையில், இப்போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டத்தின் போது இங்கிலாந்து வீரர் டேவிட் மாலன் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் கிரிக்கெட் விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டதாக இந்திய வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மாவுக்கு விதி எண் 2.1.7-ன் படி ஊதியத்தில் இருந்து 15 சதவீத தொகையை அபராதம் விதித்து ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் லெவல் 1-ன் படி ஒரு டிமெரிட் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது. 

மாலன் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் அவரை நோக்கி ஆக்ரோஷமான செயலில் ஈடுபட்டதாக நடுவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது தனது செயலுக்கு இஷாந்த் ஷர்மா வருத்தம் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.