ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

இந்திய அணியில் மூன்று மாற்றங்கள்: தொடரும் கோலியின் ‘விநோத’ சாதனை!

கோலி தலைமையில் தொடர்ச்சியாக இரு டெஸ்டுகளில் ஒரே அணி இதுவரை விளையாடியதில்லை...

News image
Updated On :18 ஆகஸ்ட் 2018, 10:00 am

எழில்

2014-ல் லார்ட்ஸ் டெஸ்டை இந்திய அணி வென்றது. அப்போது முதல் டெஸ்ட் நடைபெற்ற டிரெண்ட் பிரிட்ஜில் இடம்பெற்ற அதே அணியே லார்ட்ஸ் டெஸ்டிலும் இடம்பெற்றது. ஆனால் அடுத்த டெஸ்டில் இந்திய அணியில் மாற்றம் நிகழ்ந்தது. இஷாந்த் சர்மா, பின்னிக்குப் பதிலாக பங்கஜ் சிங், ரோஹித் சர்மா அணியில் இடம்பெற்றார்கள். அன்று ஆரம்பித்த அணி மாற்றம் இன்று வரை தொடர்கிறது.

இன்று தொடங்கியுள்ள நாட்டிங்ஹாம் டிரெண்ட்பிரிட்ஜ் டெஸ்டில் இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. முரளி விஜய், தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவுக்குப் பதிலாக ஷிகர் தவன், ரிஷப் பந்த், பூம்ரா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

2014 லார்ட்ஸ் டெஸ்டுக்குப் பிறகு இன்றைய டிரெண்ட்பிரிட்ஜ் டெஸ்ட் வரை தொடர்ந்து 45-வது டெஸ்டுகளாக இந்திய அணியில் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. இந்தக் காலகட்டத்தில் தோனி, கோலி, ரஹானே ஆகியோர் இந்திய அணியின் கேப்டன்களாகப் பணியாற்றியுள்ளார்கள்.

அதிலும் கோலி தலைமையில் இந்திய அணி விளையாடிய அனைத்து டெஸ்டுகளிலும் குறைந்தது ஒரு மாற்றமாவது நிகழ்ந்துள்ளது. இது கோலி தலைமையேற்றுள்ள 38-வது டெஸ்ட். அவர் தலைமையில் தொடர்ச்சியாக இரு டெஸ்டுகளில் ஒரே அணி இதுவரை விளையாடியதில்லை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.