நெதர்லாந்தில் நடைபெறும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 10-வது சுற்றில் வெற்றி கண்டுள்ளார்.
9-வது சுற்றில் கார்ல்சனுடன் டிரா செய்த ஆனந்த், 10-வது சுற்றில் இங்கிலாந்தைச் சேர்ந்த கவைன் ஜோன்ஸை எதிர்கொண்டார். கருப்பு நிறக் காய்களில் விளையாடிய ஆனந்த் 40-வது காய் நகர்த்தல்களில் வெற்றி கண்டார். இந்தப் போட்டியில் 3-வது முறையாக வெற்றி கண்டுள்ளார் ஆனந்த்.
10-வது சுற்றின் முடிவில் ஆறு புள்ளிகளுடன் 5-ம் இடத்தில் உள்ளார் ஆனந்த்.