ஐபிஎல்லையும் கிறிஸ் கெயிலையும் பிரிக்கமுடியாது. மகத்தான பல ஆட்டங்களை ஐபிஎல்-லில் அவர் நிகழ்த்தியுள்ளார். ஆனால், இந்த ஐபிஎல்-லில் அவரை எந்தவொரு அணியும் தேர்வு செய்யவில்லை என்பது மிகவும் ஆச்சர்யமான விஷயம். இதுபோல இன்று நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் பல ஆச்சர்யங்கள் நிகழ்ந்துள்ளன.
லசித் மலிங்கா, ஹசிம் ஆம்லா, முரளி விஜய் போன்ற பல வீரர்கள் ஏலத்தில் தேர்வாகாமல் போனார்கள். இந்த பட்டியலில் உள்ள வீரர்கள் அனைவரும் இதுவரையிலான ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றவர்கள் ஆவர். மேலும் பெரும்பாலான புதுமுக வீரர்கள் ரஞ்சி உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் பிரகாசித்தாலும் இம்முறை ஏலத்தில் இருந்து கழட்டி விடப்பட்டுள்ளனர்.
இன்றைய ஐபிஎல் ஏலத்தில் இதுவரை தேர்வாகாத பிரபல வீரர்கள்