புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஒருநாள்: இங்கிலாந்து அணி அதிரடி தொடக்கம்!

ஜேஸன் ராய் 38 ரன்களில் குல்தீப் யாதவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்...

News image
Updated On :12 ஜூலை 2018, 12:25 pm

எழில்

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடி வருகிறது. 

நாட்டிங்கமில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இந்திய அணியில் காயம் காரணமாக புவனேஸ்வர் குமார் விலகியுள்ளார். இதையடுத்து சித்தார்த் கெளல் ஒருநாள் ஆட்டத்தில் அறிமுகமாகியுள்ளார். மற்றபடி இந்திய அணியில் பெரிய மாற்றம் எதுவுமில்லை. இந்த ஆட்டத்திலும் சுரேஷ் ரெய்னா இடம்பெற்றுள்ளார். உமேஷ் யாதவ், சித்தார்த் கெளல், குல்தீப் யாதவ், சாஹல், பாண்டியா ஆகியோர் பந்துவீச்சாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

பேட்டிங்கில் மிகவும் பலமாக உள்ள இங்கிலாந்து அணி, இன்றும் தனது பலத்தை நிரூபித்தது. முதல் ஓவரிலேயே இந்திய அணி பேர்ஸ்டோவின் விக்கெட்டை வீழ்த்த ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் எல்பிடபிள்யூ-வை நடுவர் தர மறுத்ததால் நல்ல வாய்ப்பு வீணானது. 

5 ஓவர்களுக்கு இங்கிலாந்து அணி, 26 ரன்கள் எடுத்தது. அதன்பிறகு, தொடக்க வீரர்கள் ராயும் பேர்ஸ்டோவும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதையடுத்து இங்கிலாந்து அணி 11 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்தது. ஜேஸன் ராய் 38 ரன்களில் குல்தீப் யாதவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஜானி பேர்ஸ்டோவ் 36 ரன்கள், ஜோ ரூட் 1 ரன்னுடன் களத்தில் உள்ளார்கள்.

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.