பிரபல பிரேசில் கால்பந்து வீரரான நெய்மர் கடந்த ஆண்டின் சிறந்த பிரெஞ்சு கால்பந்து வீரர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உலகிலேயே மிகவும் அதிகத் தொகை கொடுத்து வாங்கப்பட்ட வீரரான நெய்மர் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த சில மாதங்களாக காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் தற்போது குணமடைந்து வரும் ஜூன் மாதம் ரஷியாவில் தொடங்கவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் விளையாட தயாராகி வருகிறார்.
எனினும் கடந்த சீசனில் பிஎஸ்ஜி அணிக்காக 20 லீக் ஆட்டங்களில் நெய்மர் 19 கோல்களை அடித்தார். பாரிஸில் திங்கள்கிழமை நடந்த விழாவில் சிறந்த பிரெஞ்சு கால்பந்து வீரருக்கான விருது நெய்மருக்கு வழங்கப்பட்டது. இதுதொடர்பாக நெய்மர் கூறியதாவது: காயத்தில் இருந்து தற்போது மீண்டு வருகிறேன். பிரேசில் அணிக்காக மீண்டும் எனது பங்களிப்பை உலகக் கோப்பையில் வழங்க ஆர்வமாக உள்ளேன். பிஎஸ்ஜி அணியை விட்டு விலகும் எண்ணம் எதுவுமில்லை. அந்த அணியிலேயே தொடர்ந்து விளையாடுவேன் என்றார் நெய்மர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசியல் பங்கேற்பை எளிதாக்கும் சமூக ஊடகங்கள்!

ஒட்டன்சத்திரம் - தொடா் சாதனை படைப்பாரா அர.சக்கரபாணி?
மாற்றம் பெற வேண்டும் தேர்தல் நடைமுறை

மாநகராட்சிப் பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படுமா?
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


