சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

மாநில கைப்பந்து: சென்னை, கோவை அணிகள் வெற்றி

எட்டயபுரம் அருகே படர்ந்தபுளியில் நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் சென்னை, கோவை அணிகள் வெற்றி பெற்றன.

Updated On :21 மே 2018, 8:09 pm

எட்டயபுரம் அருகே படர்ந்தபுளியில் நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் சென்னை, கோவை அணிகள் வெற்றி பெற்றன.
லியா கைப்பந்து கழகம் சார்பில் கனரா வங்கி கோப்பைக்கான 15வது ஆண்டு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாநில கைப்பந்து போட்டிகள் பகல் இரவு ஆட்டங்களாக சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாள்கள் நடைபெற்றன. 
ஆண்களுக்கான போட்டிகள் நாக் அவுட் முறையில் நடத்தப்பட்டன. இதில் தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை, சென்னை, ராமநாதபுரம், கோவை, திருப்பூர் உள்பட தமிழகம் முழுவதிலும் இருந்து 35க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று விளையாடின. இறுதி ஆட்டத்தில் கேரள வாலி அணியும், கோவை தடாகம் சி.வி.சி. அணியும் மோதின. இதில் 3:1 என்ற புள்ளி கணக்கில் கோவை அணி வெற்றி பெற்றது.
பெண்களுக்கான போட்டிகள் லீக் முறையில் நடத்தப்பட்டன. இதில் 6 அணிகள் கலந்து கொண்டன. சென்னை தாம்பரம் அணியும், திருச்சி பிஷப் ஹீபர் அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இதில் 2:0 என்ற புள்ளி கணக்கில் சென்னை தாம்பரம் அணி வெற்றி பெற்றது.
பரிசளிப்பு விழாவுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வி.சீனிவாசன் தலைமை வகித்தார். தூத்துக்குடி மண்டல அலுவலக கனரா வங்கி உதவிப் பொதுமேலாளர் காந்தி, வெற்றி பெற்ற அணிகளுக்கு கனரா வங்கி சுழற்கோப்பையை வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.