சாதனை நாயகனும், இந்திய கிரிக்கெட் அணி கேப்டனுமான விராட் கோலி திங்கள்கிழமை தனது 30-ஆவது பிறந்த நாளை கொண்டாடினார்.
கடந்த 1988 நவம்பர் 5-ஆம் தேதி பிறந்த விராட் கோலிக்கு 29 வயது நிறைவடைந்துள்ளது.
பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான கோலி பிறந்த நாளை மனைவி அனுஷ்கா சர்மாவுடன் ஹரித்வாரில் கொண்டாடினார். முதலில் அவருக்கு ஜாம்பவான் சச்சின் சுட்டுரையில் (டுவிட்டர்) பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் பிசிசிஐ, விவிஎஸ்.லக்ஷ்மண், விரேந்தர் சேவாக், முகமது சமி, ரித்திமன் சாஹா, முகமது கைஃப், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், புஜாரா, ஆப்கன் ஸ்பின்னர் ரஷீத் கான், என பலரும் கோலி பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அவரது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா, அவர் பிறந்ததற்காக கடவுளுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற மே.இ.தீவுகள் உடனான ஒரு நாள் தொடரில் தான் உலகிலேயே அதிவிரைவாக 10,000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார் கோலி. சச்சின் சாதனையான 259 இன்னிங்ஸ் என்பதை 205 இன்னிங்ஸில் கடந்து சாதனை படைத்தார் கோலி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









