தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

இந்தியா அபார பந்துவீச்சு: 2-வது டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி தடுமாற்றம்!

முதல் ஓவரிலேயே கேப்டன் ஃபிஞ்ச் எதிர்கொண்ட முதல் பந்தில் அவரை வெளியேற்றினார் புவனேஸ்வர்...

News image
Updated On :23 நவம்பர் 2018, 8:45 am

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 2-ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டம் மெல்போர்னில் இன்று தொடங்கியுள்ளது. மொத்தம் 3 ஆட்டங்கள் கொண்ட இத்தொடரில் முதல் ஆட்டத்தில் வென்று ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது. எனவே, 2-ஆவது ஆட்டத்தில் வென்றால் மட்டுமே தொடரை தக்க வைக்க இயலும் என்ற நிலையில், இந்தியா களம் காண்கிறது. தொடக்க ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய இந்தியா, அதிலிருந்து மீண்டு வரும் முனைப்பில் உள்ளது. ஏனெனில், கோலி தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 7 டி20 தொடர்களை கைப்பற்றியுள்ளது. எனவே, இந்தத் தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் 2-ஆவது டி20 ஆட்டத்தை எதிர்கொள்கிறது. 

மழையால் டாஸ் நிகழ்வு சற்று தாமதமானது. இதன்பிறகு டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதல் டி20 ஆட்டத்தில் விளையாடிய அதே அணியை இந்த ஆட்டத்துக்கும் அவர் தேர்வு செய்துள்ளார்.

முதல் ஓவரிலேயே கேப்டன் ஃபிஞ்ச் எதிர்கொண்ட முதல் பந்தில் அவரை வெளியேற்றினார் புவனேஸ்வர். 2-வது ஓவரை கலீல் அஹமது வீசினார். இதனால் அதே அணியைத் தேர்வு செய்தாலும் இந்திய அணியின் திட்டங்களில் மாறுதல் ஏற்பட்டிருந்தது. புவனேஸ்வர் வீசிய 3-வது ஓவரில் ரிஷப் பந்தும் பூம்ராவும் கேட்சுகளை நழுவவிட்டார்கள். 

சிறப்பான பந்துவீச்சால் இந்திய அணி தொடர்ந்து அழுத்தம் கொடுத்தது நல்ல பலனைத் தந்தது. 1 சிக்ஸரும் 1 பவுண்டரியும் அடித்த லின், 13 ரன்களில் கலீல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தனது அடுத்த ஓவரில் ஷார்ட்டை 14 ரன்களில் வீழ்த்தினார் கலீல். புவனேஸ்வரும் கலீலும் விக்கெட்டுகள் எடுத்த நிலையில் அடுத்த ஓவரில் ஸ்டாஸ்னிஸை 4 ரன்களில் வெளியேற்றினார் பூம்ரா.

பிறகு 11-வது ஓவரில் மேக்ஸ்வெல்லை 19 ரன்களில் க்ளீன் போல்ட் ஆக்கி வெளியேற்றினார் கிருனால் பாண்டியா. இதனால் 11 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 62  ரன்கள் எடுத்து தடுமாற்றம் கண்டுள்ளது ஆஸ்திரேலிய அணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.