யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

விராட் கோலி இணையத்தளத்தை ஹேக் செய்து பரபரப்பை ஏற்படுத்திய வங்கதேச ரசிகர்கள்!

இந்திய அணியின் வெற்றியாலும் நடுவரின் முடிவாலும் கோபமடைந்த வங்கதேச ரசிகர்கள் கோலியின் இணையத்தளத்தை

News image
Updated On :3 அக்டோபர் 2018, 6:54 am

எழில்

சமீபத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பைப் போட்டியில், வங்கதேச அணியைக் கடும் போராட்டத்துக்குப் பின் 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வென்றது. 

இந்நிலையில் இந்திய அணியின் வெற்றியாலும் லிட்டன் தாஸின் விக்கெட் குறித்த நடுவரின் முடிவாலும் கோபமடைந்த வங்கதேச ரசிகர்கள் கோலியின் இணையத்தளத்தை ஹேக் செய்துள்ளார்கள். வங்கதேசத்தைச் சேர்ந்த சைபர் செக்யூரிட்டி & இண்டெலிஜென்ஸ் (சிஎஸ்ஐ) என்கிற அமைப்பு இந்திய கேப்டன் கோலியின் இணையத்தளத்தை ஹேக் செய்துள்ளது. இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான நடுவரின் முடிவு குறித்த புகைப்படங்கள் கோலியின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. எல்லா நாடுகளும் சம அளவில் நடத்தப்படவேண்டும். இது எப்படி அவுட் எனச் சொல்லுங்கள் என அதில் கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன.

எனினும் தற்போது கோலியின் இணையத்தளம் ஹேக்கர்களிடமிருந்து மீட்கப்பட்டு பழைய நிலைமைக்கு வந்துள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.